தமிழ் மக்களின் ஈழக்கனவினை சர்வதேசத்தின் துணையுடன் நாங்கள் தகர்த்து எறிவோம் என்று நல்லாட்சில் ஜனாதிபதி சொல்வது வெறும் பகல் கனவுதான் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) நேற்று (16) இரவு கூறியுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) வழங்கிய நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட முனைக்காடு மாரியம்மன் கோவில் அரங்கம் வைபவ ரீதியாக நேற்று (16) இரவு திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,
இதன்போது மேலும், கருத்து தெரிவித்த கருணாகரம்,
முனைக்காட்டு மக்கள் விடுதலை இயக்கங்களுக்கு கொடுத்த ஊக்கம், ஆதரவு இன்றும் என் மனதில் அழியாமல் இருக்கிறது.
அது மாத்திரமல்லாமல் இந்த கிராம மக்கள் கடந்த காலப் போராட்ட வரலாற்றில் எத்தனையோ இழப்புக்களைச் சந்தித்திருக்கிறார்கள்.
கடந்த சில நாட்களிற்கு முன்பு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெகிவளையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சி.வி.குணவர்த்தனாவின் 16ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றிய போது, சர்வதேசத்தின் துணையுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் கனவான ஈழக் கனவினை நாங்கள் தகர்த்தெறிவோம் என்று கூறியுள்ளார்.
இந்த சர்வதேசத்தில் 16கும் மேற்பட்ட நாடுகள் உதவி செய்தன, ஆயுத ரீதியாக உதவிகள் வழங்கியதன் மூலமாக ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.
ஆனால் அந்த நாடுகள் அனைத்தும் இந்த நாட்டின் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வது நீண்ட காலப் போராட்டமான தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என்பதுதான்.
கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட எங்களது அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
ஆயுதப்படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
அதிகாரப் பரவலாக்கம் கொண்ட வடகிழக்கு இணைந்த ஒரு தாயகம் உருவாக்கப்பட வேண்டும். அதற்குள்ளே காணி, பொலிஸ் அதிகாரம் உட்பட சகல அதிகாரங்களும் உள்ளடக்கப்பட்ட சுயாட்சி கொடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தீர்வினை தாந்தால்,தமிழ் மக்களின் ஈழக்கனவினை நிறுத்திவிடலாம் என்பது எங்களது கோரிக்கை எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) வழங்கிய நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட முனைக்காடு மாரியம்மன் கோவில் அரங்கம் வைபவ ரீதியாக நேற்று (16) இரவு திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,
இதன்போது மேலும், கருத்து தெரிவித்த கருணாகரம்,
முனைக்காட்டு மக்கள் விடுதலை இயக்கங்களுக்கு கொடுத்த ஊக்கம், ஆதரவு இன்றும் என் மனதில் அழியாமல் இருக்கிறது.
அது மாத்திரமல்லாமல் இந்த கிராம மக்கள் கடந்த காலப் போராட்ட வரலாற்றில் எத்தனையோ இழப்புக்களைச் சந்தித்திருக்கிறார்கள்.
கடந்த சில நாட்களிற்கு முன்பு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெகிவளையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சி.வி.குணவர்த்தனாவின் 16ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றிய போது, சர்வதேசத்தின் துணையுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் கனவான ஈழக் கனவினை நாங்கள் தகர்த்தெறிவோம் என்று கூறியுள்ளார்.
இந்த சர்வதேசத்தில் 16கும் மேற்பட்ட நாடுகள் உதவி செய்தன, ஆயுத ரீதியாக உதவிகள் வழங்கியதன் மூலமாக ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளனர்.
ஆனால் அந்த நாடுகள் அனைத்தும் இந்த நாட்டின் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வது நீண்ட காலப் போராட்டமான தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என்பதுதான்.
கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட எங்களது அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
ஆயுதப்படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
அதிகாரப் பரவலாக்கம் கொண்ட வடகிழக்கு இணைந்த ஒரு தாயகம் உருவாக்கப்பட வேண்டும். அதற்குள்ளே காணி, பொலிஸ் அதிகாரம் உட்பட சகல அதிகாரங்களும் உள்ளடக்கப்பட்ட சுயாட்சி கொடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தீர்வினை தாந்தால்,தமிழ் மக்களின் ஈழக்கனவினை நிறுத்திவிடலாம் என்பது எங்களது கோரிக்கை எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.






No comments:
Post a Comment