June 22, 2016

வட்டுவாகல் பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!

வட்டுவாகல் பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது

இன்று காலை முல்லைத்தீவு பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பை நோக்கி சென்ற உழவியந்திரம் ஒன்று பாலத்தின் நடுப்பகுதியில் வைத்து புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவு நகரில் உள்ள சீமெந்து கற்கள் உற்பத்தி செய்யும் தொழில்சாலையில் தொழில் செய்வதற்காக மோட்டர் சைக்கிளில் வந்த நபர்மீது மூதியுள்ளது.
இதன்காரணமாக பாலத்தினுள்ளே தூக்கி வீசப்பட்ட நபர் அந்த இடத்திலேயே பலியாகியுள்ளார்.
குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் அதிவேகமாக வந்ததின் காரணமாக உழவியந்திரத்தின் முன்பக்கத்தில் மோட்டார் சைக்கிளின் கண்ணாடி மோதி நிலைதடுமாறி வேகத்தை கட்டுப்படுத்த முடியாது பாலத்தினுள் வீழ்ந்து பலியாகியுள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு ஆனந்த புரத்தை சேர்ந்த இரண்டுபிள்ளைகளின் தந்தையான சதீஷ் என அறிய முடிகின்றது .
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை மேற்க்கொண்டுள்ளதோடு சடலம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment