June 29, 2016

சுவாதி கொலை செய்யப்பட்டது எப்படி! நேரில் கண்ட சிற்றுண்டிச்சாலை ஊழியர் வாக்குமூலம்!

படுகொலை செய்யப்பட்ட பொறியியலாளர் சுவாதியின் கொலை தொடர்பிலான நேரில் கண்ட சாட்சியாளரின் வாக்குமூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த 24ம் திகதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியியலாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவமானது அங்கு பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த அதேவேளை, பெண்கள் பலரின் பாதுகாப்பினையும் கேள்விக்குறியாக்கியது.

குறித்த கொலை சம்பவம் இடம்பெற்று சுமார் நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், குற்றவாளியை கண்டு பிடிப்பது பொலிஸாருக்கு பாரிய சவாலாக காணப்படுகின்றது.

இந்நிலையிலேயே, சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் காணப்பட்ட கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளியிள் புகைப்படத்தினை பொலிஸார் அண்மையில் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த புகைப்படத்தில் இருப்பவரே சுவாதியை கொலை செய்த குற்றவாளியென தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், கண்காணிப்பு கமரா படத்தில் இருக்கும் கொலையாளியினை அடையாளம் காட்டியுள்ளார்.

சுவாதி கொல்லப்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலைய 2வது நடைமேடையில் அமைந்துள்ள சிற்றுண்டிச் சாலை ஊழியர் ஒருவரே குற்றவாளியை அடையாளம் காட்டியுள்ளார்.

சிற்றுண்டிச் சாலையில் பரபரப்பாக வியாபாரம் இடம்பெற்றிருந்த வேளையிலேயே, சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதை சிற்றுண்டிச் சாலையில் இருந்த ஊழியர் ஒருவர் நேரில் பார்த்துள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்து போன அவர், பயத்தில் இதுகுறித்து பேசாமல் இருந்து வந்த நிலையில், பொலிஸார், ரயில்வே சிற்றுண்டிச் சாலை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதன் போது சிற்றுண்டிச் சாலை ஊழியர்களிடம் கொலைகாரனின் புகைப்படத்தை காட்டி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கொலை சம்பவத்தை நேரில் பார்த்த அச்சிற்றுண்டிச் சாலை ஊழியர், சுவாதியை கொலை செய்த கொலைகாரனை அடையாளம் காட்டினார்.

அத்துடன், கொலைக்காட்சி குறித்தும் வாக்குமூலம் அளித்துள்ள அவர், இக்கொலை வழக்கில் முக்கிய சாட்சியாளராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

கொலை சம்பவம் குறித்து அவர் பொலிஸாரிடம் வழங்கியுள்ள வாக்குமூலத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

கொலைகாரனும், கொலை செய்யப்பட்ட சுவாதியும் சிறிது நேரம் கடை அருகே நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் என்ன பேசினார்கள்? என்பதை நான் கவனிக்கவில்லை. ஆனால் காரசாரமாக சிறிது நேரம் பேசினார்கள்.

திடீரென ”ஐயோ... அம்மா...” என்று குரல் கேட்டது. கொலைகாரன் பக்கவாட்டில் சற்று பின்பக்கமாக நின்று அந்த பெண்ணை வெட்டினான்.

இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட அந்த பெண் அருகில் இருந்த இருக்கையில் விழுந்தார். பின்னர் தரையில் சாய்ந்து விட்டார்.

சிறிது நேரம் அவர் உயிருக்கு போராடியபடி இருந்தார். அதிர்ச்சியில் இருந்த எங்களால் அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை.

உடனே அந்த கொலைகாரன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டான். அதன் பின்னர், ஓடிச்சென்று பார்த்தோம்.

எனினும், அப்பெண் உயிரிழந்து விட்டார் என சிற்றுண்டிச் சாலை ஊழியர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment