June 29, 2016

நளினி மற்றும் பேரறிவாளனுக்கு பிணை வழங்க வேண்டும்! வைகோ கோரிக்கை!

நளினி, பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.


ம.தி.மு.க. கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் அரியலூர் மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பொறியியலாளர் சுவாதி கொலையில் உரிய விசாரணை நடத்தி, கொலையாளி விரைவில் கைது செய்ய வேண்டும்.

இது போன்ற சம்பவங்களால் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாதது தெரியவருகிறது. இது போன்ற சம்பவங்கள் இனியும் நிகழாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

பணத்திற்காக கொலைகளில் ஈடுபடும் கூலிப்படையினரின் கலாச்சாரம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. எனவே, அவர்களை ஒழிக்க வேண்டும்.

தமிழக மக்கள் நலனுக்காக ம.தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும். சட்டத்தரணிகளுக்கு எதிரான சட்டம் அவர்களுக்கான உரிமையை பாதிக்கும். எனவே அவர்கள் போராட்டம் நடத்துவது நியாயமானது.

இதேவேளை, ராஜூவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோர் பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment