September 4, 2015

ஓயாத தமிழர்களின் உரிமைப்போராட்டம் - ஐநாவை நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் பெல்ஜியம் நாட்டை வந்தடைந்தது(படங்கள் இணைப்பு)

தமிழின அழிப்புக்கு  அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப்  பயணம் நேற்றைய தினம் காலை நெதர்லாந்து ப்றேடா நகரை நோக்கி 72 KM  சென்று
மாலை 3 மணியளவில் பெல்ஜியம் எல்லைப்பகுதியில் வந்தடைந்தது . அங்கு நெதர்லாந்து மனிதநேய செயற்பாட்டாளர்கள் ஈருருளிப்  பயணத்தை பெல்ஜியம் செயற்பாட்டாளர்களிடம் கையளித்தனர் .
அதை தொடர்ந்து பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மனிதநேய  ஈருருளிப்  பயணத்தை  ஒருங்கிணைத்து அன்ற்வேர்பேன் நகரில் உள்ள மாவீரர்கள் கல்லறையை நோக்கி பயணித்து  அங்கு அகவணக்கம் செலுத்தியதுடன் தொடர்ந்து அங்கிருந்து புருச்சல் நகரை நோக்கி 90 KM  பயணித்துள்ளனர் .

இன்றைய தினம் (04.09) ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னர் மதியம் 13 மணிக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற இருக்கின்றது . அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தோடு முக்கிய அரசியல் சந்திப்புகள் நடைபெற இருக்கின்றது . 
இச் சந்திப்பில் உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையே பரிகார நீதியை நிலைநாட்டும் என்று வலியுறுத்தப்படும் . 

அரசியல் சந்திப்புகள் நிறைவில் மனிதநேய  ஈருருளிப்  பயணம்  தொடர்ந்து  லக்சம்புர்க்,பிரான்ஸ் , யேர்மனியை ஊடறுத்து சுவிஸ் நாட்டுக்கு சென்று எதிர்வரும் 21 ம் திகதி மாபெரும் ஐநா பேரணியில் இணைந்துகொள்ளும் .
தமிழின அழிப்புக்கு நீதி கோரும்  இப் பேரணியில் அனைத்து ஐரோப்பிய வாழ் தமிழ் மக்களும் கலந்துகொள்ளவேண்டும்  காலத்தின் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.









No comments:

Post a Comment