September 28, 2015

பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்! பாணந்துறையில் சம்பவம்!

பாணந்துறைப் பிரதேசத்தில் இன்று காலை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் திணைக்களம் அளித்துள்ள விளக்கம் கீழ்வருமாறு,
பாணந்துறைப் பிரதேசத்தின் ஊடாக போதைப் பொருள் கடத்திச் செல்லப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பிரதேசத்தின் ஊடாக செல்லும் சந்தேகத்திற்குரிய வாகனங்களை பொலிசார் சோதனையிட்டுள்ளனர்.
எனினும் ஒரு ஜீப் வண்டி பொலிசாரின் சைகையை மீறி நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளது.
இதனையடுத்து பொலிசார் குறித்த வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளார். பொலிசாரே அந்த நபரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment