September 19, 2015

ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான விஜயம்!

ஜேர்மனின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஃப்ராங் வோல்டர் ஸ்ரெயின்மெர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.எதிர்வரும் 22ஆம் திகதி அவர் இலங்கை
வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.அத்துடன் அவர் கிளிநொச்சி மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொண்டு, அங்கு ஜேர்மனி அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் பயிற்சி கூடத்தை கண்காணிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment