September 29, 2015

தூக்குத் தண்டனை நிறைவேற்றக் கோரி வவுனியாவில் கையெழுத்து வேட்டை!

பெண்கள், சிறுவர்கள் மீது இழைக்கப்படும் பாலியல் வன்புணர்வுக்கு குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கக்கோரி இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய தொழிற்சங்கத்தினால் கையெழுத்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் ஆரம்பமாகிய இப் போராட்டம் இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கிறது.
யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் சிறுவர், பெண்கள் மீதான வன்புனர்வுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
நாளாந்தம் இவை தொடர்பான செய்திகள் மனதை உருக்குவதுடன் மனித மிருகத்தனமான செயற்பாடுகளை எண்ணி தலைகுனிய வைக்கிறது.
இதனால் இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.
அதன் மூலமே எமது சமூகத்தை பாதுகாக்க முடியும் என கையெழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சங்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இக் கையெழுத்தப் போராட்டத்தில் பெருமளவானவர்கள் ஆர்வத்துடன் கையொப்பம் இட்டுவருகின்றனர்.

No comments:

Post a Comment