September 15, 2015

சுவிஸ் பண்ணை வீட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து!

சுவிட்சர்லாந்தில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் தப்பிக்க வழியில்லாமல் உடல் கருகி உயிரிழந்த
சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின் பெர்ன் மண்டலத்தில் உள்ள சிக்னவ் என்ற பகுதியில் தான் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.நேற்று மாலை வேளையில் பண்ணை வீடு ஒன்று தீப்பற்றி எரிந்துக்கொண்டு இருப்பதாகவும், தீ பிற கட்டிடங்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக தீயணைப்பு வீரர்களுடன் சென்ற பொலிசார், கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுப்படுத்த போராடியுள்ளனர்.தீயணைப்பு வீரர்கள் தீ ஜுவாலைகள் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பரவாமல் முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.சில மணி நேர போராட்டங்களுக்கு பிறகு, தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், பண்ணைவீடு முழுவதுமாக தீக்கிரையாக நாசமடைந்தது.பண்ணை வீட்டின் முதல் தளத்தை தீயணைப்பு வீரர்கள் பரிசோதனை செய்தபோது, அங்கு கருகிய நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
உயிரிழந்துள்ள நபர் அடையாளம் தெரியாதவாறு எரிந்திருந்ததால், அந்த நபர் தொடர்பான தகவல்களை பொலிசாரால் சேகரிக்க இயலவில்லை.மேலும், பண்ணை வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் எதுவும் தெரியவராததால், அது குறித்து பெர்ன் மண்டல பொலிசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

No comments:

Post a Comment