September 15, 2015

அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் இரவிரவாகக் காமக்களியாட்டம்!

நேற்று முன்தினம் இரவு அரியாலை பூம்புகார்ப் பகுதியில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் இரண்டு ஆட்டோக்களில் வந்தவர் பெரும் சமூகச்சீரழிவுகளைச் செய்துள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர்
ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இவர்கள் அப்பகுதியில் உள்ள தென்னம் தோட்டத்தினுள் வந்திருந்துள்ளனர். இவர்களில் 3 பேர் இளம் யுவதிகளாவார்.நகரப்பகுதியில் தான் வேலை முடித்துவிட்டு தனது வீட்டுக்குச் சென்ற போது இரு ஆட்டோக்கள் குறித்த தென்னந்தோட்டத்தில் நிற்பதை அவதானித்துவிட்டு அங்கு நிற்க முற்பட்ட போது அந்த ஆட்டோவிற்குள் அவர்களுக்கு பாதுகாப்பாக நின்ற நபர் தன்னைத் துரத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் தான் தனது மோட்டார் சைக்கிளை துாரத்தில் விட்டுவிட்டு நடந்து வந்து பார்த்த போது குறித்த நபர்களும் அந்த யுவதிகளும் மது அருந்திய நிலையில் வெட்ட வெளியில் காமக்களியாட்டங்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.குறித்த தென்னந்தோட்டத்தினுள் காவலாளி ஒருவரும் இருப்பதால் அவருடைய துணையிலேயே இது நடந்ததாக குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நான் அப்பகுதியில் வசிக்கும் சிலரிடம் தெரிவித்த போதும் அவர்கள் பயம் காரணமாக அங்கு வரவில்லை எனவும், காலையில் தான் தோட்டக் காவல்காரனிடம் இச் சம்பவம் பற்றி கேட்ட போது தன்னை தகாத வார்த்தைகளால் ஏசித் துரத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தோட்டத்தினுள் பல தடவைகள் மர்மமான முறையில் இரவு வேளைகளில் ஆட்டோக்கள் வந்து போனதாகவும் ஆனால் அன்று மட்டும் இரு ஆட்டோக்கள் நின்றதால் சந்தேகப்பட்டு பார்த்த போதே இவ்வாறான தவறான செயற்பாடுகள் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment