September 19, 2015

கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து வயோதிப பெண் பலி!

சுன்னாகம் பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றுக்குள் வெள்ளிக்கிழமை (18) தவறி வீழ்ந்த வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

கிணற்றின் மீது போடப்பட்டிருந்த வலையில் விழுந்திருந்த குப்பைகளை அகற்றிய போது வாளையா இராஜேஸ்வரி (வயது 68) என்ற வயோதிபப் பெண்ணே இவ்வாறு கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். சடலம் மரண விசாரணைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment