September 19, 2015

கொஸ்கொட மாபெல்லே பகுதியில் தந்தையால் கடலுக்குள் தள்ளிவிடப்பட்ட இரண்டரை வயதுக் குழந்தையின்  சடலம் மஹாபெலன பகுதியில் இன்று சனிக்கிழமை(19) கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாபெல்லே பகுதியிலுள்ள கற்பாறைக்கு குழந்தையும் மனைவியையும் அழைத்து சென்ற நபர் அவ்விருவரையும் அங்கிருந்து கடலுக்குள் தள்ளிவிட்டுள்ளார். அவரது மனைவி கரைக்கு நீந்திவந்து உயிரை காப்பாற்றி கொண்டுள்ளார்.
எனினும்,  இரண்டரை வயதுடைய குழந்தை காணமற்போயிருந்தது. இந்நிலையிலேயே குழந்தையின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment