யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக ஒன்றுகூடிய தமிழ் உறவுகள், தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையே பரிகார நீதியை நிலைநாட்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பை மேற்கொண்டனர்.
தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்றே நீதியானது என்ற வாசகங்களோடு பாரிய பதாதைகளை தாங்கிய வண்ணம் மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
இலங்கை அரசின் உள்ளக விசாரணையை தமிழர்கள் ஆகிய நாம் கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் என்பதையும், வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் வலியுறுத்தி அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் சார்பாக மனு ஒன்றும் யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு கையளிக்கப்பட்டது.
கவனயீர்ப்பில் ஈடுபட்ட தமிழ் மக்களை ஸ்ரீலங்கா தூதரகத்தின் உளவாளியும், பணியாளருமான யேர்மன் நபர் ஒருவர் தொடர்ச்சியாக கவனித்து வந்ததோடு,
நிழற்படங்களையும் எடுத்து அச்சத்தை ஏற்படுத்த முயற்சித்தார்.
நிழற்படங்களையும் எடுத்து அச்சத்தை ஏற்படுத்த முயற்சித்தார்.
குறிபிட்ட நபரின் ஊடாக ஸ்ரீலங்கா தூதரகம் பேர்லினில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முறியடிக்க முயற்சி செய்து வருவதும், மக்களை அச்சம் கொள்ள வைப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இப் போராட்டத்தில் வருகை தந்திருந்த ஸ்ரீலங்கா தூதரகத்தின் பணியாளர் இறுதியில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் துரத்தி வைக்கப்பட்டார்.
அத்தோடு பேர்லினில் நடைபெற்ற தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நீண்ட காலமாக நடைபெற்ற வழக்கிலும் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக பார்வையாளராக நுழைந்து அனைத்து தரவுகளையும் சேகரித்தது குறிப்பிடத்தக்கது. .

No comments:
Post a Comment