September 30, 2015

கற்பிட்டி கடற்பரப்பில் 7 இந்திய மீனவர்கள் கைது!

கற்பிட்டி, பத்தலங்குண்டு பிரதேசத்திற்கு வடக்கில் இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் உதவியுடன் இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் படகு மற்றும் அவர்களால் பிடிக்கப்பட்டிருந்த 500 கிலோ கிராம் மீன், 3 திசை அறியும் கருவிகளையும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் கைப்பற்றியுள்ளது.
கல்பிட்டி கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்ட இந்திய மீனவர்கள் பின்னர், புத்தளம் மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment