September 19, 2015

ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி 29ம் தேதி போராட்டம் – சரத்குமார்!

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 29ம் தேதி போராட்டம் நடைபெறும் என சமக அறிவித்துள்ளது.இது குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க சர்வதேச விசாரணை தேவை என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் சையத் ராக் அல் ஹுசேன் கூறியுள்ளதை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சர்வதேச விசாரணைக்கு ஐ.நா சபையில் இந்தியா உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள சரத்குமார் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மத்திய அரசு ஐ.நா. மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் போர்க்குற்ற விவகாரத்தில் சர்வதேச விசாரணை கோரி ஐ.நா. உறுப்பு நாடுகளிடம் இந்தியா ஆதரவு திரட்ட வலியுறுத்தி வரும் 29ம் தேதி தமிழகம் முழுவதும் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment