August 31, 2016

நூதன முறையில் நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதி வேண்டிய யாழ். பேரணி!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சர்வதேச நீதி வேண்டும் என்று சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான கற்கை நெறி அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி யாழ். மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ். ஜ.நா செயலகம் வரை நடைபெற்றது.


இதில் காணமல் போனவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இப்பேரணியின் ஏற்பாட்டாளர்களான சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான கற்கை நெறி அமைப்பினர் கிளை இல்லாத மரம் ஒன்று அமைத்து அதில் கிளைக்கு பதிலாக காணாமல் போனோர்களின் புகைப்படங்களை தொங்க விட்டிருந்தனர்.

இது தொடர்பாக இப்பேரனியில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களும் கற்றோரும் கருத்து தெரிவிக்கையில் இம்மரம் தமிழர்கள் என்றும் இதன் கிளை காணமல் போனோர்களான இளைஞர்கள் என்றும் தமிழர்களான அந்த மரத்தின் கிளைகளை துளிர்வு அடையாமல் செய்வதன் மூலம் மரம் என்னும் தமிழ் சமுதாயத்தை அடியோடு இல்லாமல் ஆக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்ற அடிப்படையில் மிகவும் நூதனமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது என பாராட்டு தெரிவித்தனர்.





No comments:

Post a Comment