September 29, 2015

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற ‘முத்தான வியர்வை-2015’ விற்பனைச் சந்தை! (படங்கள் இணைப்பு)

வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார் பிரதேசச் செயலகத்தின் அனுசரனையுடன் ‘முத்தான வியர்வை-2015’ விற்பனைச்
சந்தை இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை வளாகத்தில் ஆரம்பமானது.
குறித்த விற்பனைச் சந்தையினை திவிநெகும திட்டத்தின் மாவட்ட பணிப்பாளர் சசிதரன்,மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்த குமார் மற்றும் திவிநெகும திட்ட அலுவலகர்கள் இணைந்த வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து குறித்த சந்தையில் உள்ள பொருட்கள் வருகை தந்த விருந்தினர்களினால் பார்வையிடப்பட்டதோடு மலிவு விற்பனையும் இடம் பெற்றது.குறித்த சந்தையில் உள்ளூர் உற்பத்திகள்,கைப்பனி பொருட்கள் என்பன மலிவு விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment