August 23, 2015

தமிழக சிறப்பு முகாம் அகதிகளை விடுதலை செய்யக்கோரி வேல்முருகன் போராட்டம் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு முகாம்களையும் நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் போராட்டம் அறிவித்துள்ளார்.
சிறப்பு முகாம்கள் என்ற போர்வையில் சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை உடனே பொதுமுகாம்களுக்கு மாற்றவோ அல்லது அவர்கள் விரும்புகிற வெளிநாட்டுக்குச் செல்லவோ அனுமதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் அப்பாவி ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கான தீர்வு தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு முகாம்களையும் இழுத்து மூடுவதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி ஆகஸ்ட் 24ம் திகதியன்று திருச்சி சிறப்பு முகாமை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தவுள்ளது.

No comments:

Post a Comment