முல்லைத்தீவு சிறுகடல் பகுதிகளில் தொடர்ந்தும் இடம்பெறும் சட்டவிரோத தொழில்களால் தமதுவாழ்வாதாரத்தொழில்கள் பாதிக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட சிறுகடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு கொக்கிளாய் ஆறு வட்டுவாகல், நந்திக்கடல், உள்ளிட்ட சிறுகடற்பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி சிறுகடற்றொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இச்சிறுகடல் பகுதிகளில் தடை செய்யப்பட்ட சட்ட விரோத தொழில்கள் இடம்பெற்று வருகின்றது எனவும் இதனால் தொடர்ந்தும் தமது தொழில்கள் பாதிக்கப்படுகின்றன எனவும் இவ்வாறான சட்டவிரோததொழில்களால் சிறுகடல் வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது என்றும் இப்பகுதி கடற் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment