August 5, 2015

கொழும்பில் பாரிய போராட்டம் தொடர்ந்த பதட்டம்.!

அரச பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பு , கோட்டை , உலக வர்த்தக மைய கட்டிடத்துக்கு முன்னால் இவ்வார்ப்பாட்டம்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தனியார் மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலங்கையில் மருத்துவ பயிற்சி வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்ட வேளையில் பதட்டமான சூழல் காணப்பட்டதுடன் காவல்துறையும் இராணுவமும் பெரும் அளவில் குவிக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment