August 5, 2015

பயணப்பொதியில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாண பெண்ணின் கொலை சந்தேக நபர் கைது!

கொழும்பு புற்கோட்டை பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் பெண்ணை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


வவுனியா கோவில்குளம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையைச் சேர்ந்த குறித்த பெண் பயணப் பொதி ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அவரை கொலை செய்து புறக்கோட்டை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து பயணப் பொதி ஒன்றில் கொண்டு செல்லப்படும் காட்சிகள் ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன.

இதன அடிப்படையில் குறித்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment