August 5, 2015

புதிதாக எதனையும் தாங்கள் கோரவில்லை !வித்தியாதரன்!

தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் புதிதாக எதனையும் கோரவில்லை என்று ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.


இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்காக கடந்த காலங்களில் ஒப்புக் கொண்ட விடயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று, ஜனநாயக போராளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அவர்கள் நேற்று வெளியிட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1987ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்து - இலங்கை உடன்படிக்கை மற்றும் 2002ம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தை போன்றவற்றில் சமஸ்ட்டி கொள்கையையும், சுய ஆட்சி மற்றும் வடக்கு � கிழக்கு மாகாணங்களை தமிழ் பேசும் மக்களின் பிரதேசமாக அங்கீகரிக்கவும் சிறிலங்கா இணங்கி இருந்தது.

இது தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த விடயங்கள் ஏற்கனவே அரசாங்கத்தினால் சர்வதேசத்திடம் இணங்கிக் கொண்ட விடயம் என்பதால், அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment