July 6, 2015

முன்னாள் போராளிகளின் கோரிக்கையை நிராகரித்தது கூட்டமைப்பு!

ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் போராளிகளின் புதிய அமைப்பான, ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.வவுனியாவில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன், முன்னாள் போராளிகளின் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ந.வித்தியாதரன் தலைமையிலான குழுவினர் நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்துள்ளன.இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கூட்டமைப்பின் தரப்பில் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment