July 5, 2015

காலியில் மோட்டார் குண்டுகள் மீட்பு !

காலி கெனல் வீதியில் பாழடைந்த இடமென்றிலிருந்து மோட்டார் குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளது.காணியின் உரிமையாளர் அந்த காணியை சுத்தம் செய்த போது அங்கு குறித்த மோட்டார் குண்டுகள் இருப்பதை கண்டு
பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து அங்கு சென்ற பொலிஸார் அவற்றை மீட்டுள்ளனர்.
யாரேனும் இவற்றை அங்கு பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கும் காலி பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment