July 4, 2015

கொள்ளுப்பிட்டியில் விபசாரத்தில் ஆறு பெண்கள் கைது!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பேரில் இயங்கிவந்த விபசார விடுதியிலிருந்து ஆறு பெண் ஊழியர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, அந்நிலையத்தை நடத்திவந்த ஆணொருவரும் பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குற்ற தடுப்பு பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்தே குறித்த நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்களை கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment