July 19, 2015

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

தலைவர் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிபொதுச் செயலாளர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மைந்தன். இலங்கையில் முதலாவதுதமிழ் அரசியல்
கட்சியானஅகிலஇலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியைஉருவாக்கிய ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பேரன். தனதுபாடசாலைக்கல்வியைகொழும்புறோயல் கல்லூரியிலும் சர்வதேசபாடசாலையிலும் சட்டக் கல்வியைலண்டனிலும் மேற்கொண்டவர்.சட்டத்தரணியாகசிலகாலம் கடமையாற்றியவர்.தற்போதுதனதுசட்டத்தொழிலைமுழுமையாகக் கைவிட்டுமுழுநேரஅரசியல் பணியைஆற்றுகின்றார்.
2001 ஆம் ஆண்டுதொடக்கம் 2010 வரைதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாராளுமன்றஉறுப்பினராகவும் கடமையாற்றினார். தமிழீழவிடுதலைப்புலிகளின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சர்வதேசவிவகாரக் குழுவின் உபதலைவராகச் செயற்பட்டார். மக்களின்; சுயநிர்ணயஉரிமையைப்பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காகஉயரியஅர்ப்பணிப்பைக் கொண்டவர். 2009 மே 18 இற்குப் பின்புதமிழ்த்தேசியக் கூட்டமைப்புதமிழ்த் தேசியஅரசியலைக் கைவிட்டுசரணாகதிஅரசியலுக்குசெல்லும் முடிவினைஎடுத்தபோதுஅதிலிருந்துவெளியேறிதாயகம்,தேசியம்,சுயநிர்ணயம் என்றகொள்கையில் தெளிவாக இருந்தசெல்வராசாகஜேந்திரன்,பத்மினிசிதம்பரநாதன் ஆகியோர் இணைந்துதமிழ்த் தேசியமக்கள் முன்னணியைஉருவாக்கினார்.

No comments:

Post a Comment