July 22, 2015

பொதுத் தேர்தலுக்கு 8000 ஆயிரம் கண்காணிப்பாளர்கள்யாழ் வருகை-ஐரோப்பிய ஒன்றியம்!

பொதுத் தேர்தல் தொடர்பாக கண்காணிப்பினை மேற்கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் யாழ் வருகை


நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கண்காணிப்புப் பணிகளை மேற் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதித்துவக் குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தந்து யாழ் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடாத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

பொதுத் தேர்தலுக்காக ஐரோப்பிய ஒன்றியம்இலங்கை முழுவதும் 8000 ஆயிரம் கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளது. அத்துடன் தேர்தல் நாளன்றும் வாக்கு எண்ணும் பணிகளின் போதும் தரம் வாய்ந்த கண்காணிப்பினை மேற் கொள்ளவுள்ளதாகவும் தேர்தல் நிறைவில் 800 பக்கம் கொண்டதொரு அறிக்கையினை வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளையும், ரணில் விக்கிரசிங்காவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் இனி வரும் நாட்களில் சிவில் சமூகத்தினரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment