June 19, 2015

ஆர்.கே. சட்டமன்ற இடைத்தேர்தலில் முதல்வர் அவர்களை ஆதரித்து ஜூன் 22ஆம் நாள் முதல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தோழர்கள் பிரசாரம்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுகிற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை ஆதரித்து வரும் 22ஆம் நாள் முதல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் தீவிர பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.


தமிழகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்தது முதல் கடந்த 4 ஆண்டுகாலமாக தமிழகத்தின் ஆற்று நீர் உரிமை, வாழ்வுரிமை பிரச்சனைகளில் தமிழகத்தின் நலனுக்காக அத்தனை வழிகளிலும் பாடுபட்டு வருகிறது. 

யாருமற்ற நிலையில் தனித்துவிடப்பட்டோமோ என ஏங்கித் தவித்த தமிழீழத் தாயக உறவுகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்கிற வகையில் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றியவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். 

25 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் வாடுகிற பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்காக தொடர்ந்து சட்டப் போராட்டங்களையும்  நடத்தி வருகிறார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.  ஆகையால் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரிக்கிறது.

வரும் 22ஆம் நாள் முதல் ஆர்.கே.நகரில் மாண்புமிகு முதல்வர் அவர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை நிர்வாகிகள் ,சென்னை மாவட்ட நிர்வாகிகளைக் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் 22-ந் தேதி முதல் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியின் அனைத்து வார்டுகளிலும் சென்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க கோரி பிரசாரம் மேற்கொள்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்,

No comments:

Post a Comment