June 24, 2015

யேர்மன் தலைநகர் பேர்லினில் தாயக உறவுகளுக்கு கரம் கொடுத்த கலை மாருதம் 2015!

தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கும் முகமாகவும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்ச் சிறார்களை எமது கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை கொடுக்கும் வகையில் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால்
கடந்த பல ஆண்டுகளாக கலை மாருதம் நிகழ்வு நடைபெற்று வருகின்றது .
அந்தவகையில் இவ்வாண்டும் கலை மாருதம் 2015 சிறப்பாக நடைபெற்றது . இவ் ஆண்டு நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்த தமிழின உணர்வாளரும் , நாம் தமிழ் கட்சியின் முக்கியஸ்த்தவரும் ஆகிய பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் , புலம்பெயர் தமிழ்ச் சிறார்களின் திறமைகளையும் இன உணர்வையும் பாராட்டியதோடு , தமிழின விடுதலையை நிச்சயம் நாம் வென்றெடுப்போம் எனும் உறுதியுடன் தனது கருத்தை தெரிவித்தார் .

பிரான்சில் இருந்து வருகை தந்திருந்த ஈழத்து நாடக கலைஞர் தயாநிதி தம்பையா அவர்கள் பேர்லின் வாழ் உறவுகளையும் இணைத்து நிகழ்வில் கலந்துகொண்ட மக்களை சிரிக்கும் சிந்திக்கவும் வைத்தார் . கலை மாருதம் நிகழ்வில் இவ்வாண்டு சிறப்பு நிகழ்வாக செல்வி சௌமியா அவர்களின் இசைக்கச்சேரி இடம்பெற்றது . தொடர்ந்து சிறுவர்களின் மற்றும் இளையோர்களின் பல நடனங்கள் பாராட்டுகளை பெறும்வகையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது .
கடந்த ஆண்டுகளை போன்று இவ் நிகழ்வின் ஊடாக தாயக உறவுகளுக்கு உதவித் திட்டம் வழங்கப்பட்டது .IMG_0675
IMG_0702 - Kopie
IMG_0723 - Kopie
IMG_0728 - Kopie
IMG_0731 - Kopie
IMG_0744 - Kopie
IMG_0746 - Kopie
IMG_0750 - Kopie
IMG_0758 - Kopie
IMG_0768 - Kopie
IMG_0773 - Kopie
IMG_0777 - Kopie
IMG_0781 - Kopie
IMG_0789 - Kopie
IMG_0798 - Kopie
IMG_0804 - Kopie
IMG_2315
IMG_2323
IMG_2339
IMG_2347
IMG_2350
IMG_2356
IMG_2364
IMG_2380 - Kopie
IMG_2435
IMG_2442
IMG_5938
IMG_5943 - Kopie
IMG_5947
IMG_5958
IMG_5959
IMG_5961

No comments:

Post a Comment