April 9, 2015

காக்கைத்தீவு கடலில் மீன் பிடிக்க சென்றவர்களின் படகு கவிழந்து ஒருவர் மரணம்!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்கைத்தீவு, மண்டதீவு கடலில் மீன் பிடிக்க சென்றவர்களின் படகு கவிழந்து விபத்துக்குள்ளானதில் குருநகர், 2ஆவது ஒழுங்கையைச்சேர்ந்த சத்தியசீலன் ராஜீவன் (வயது 29) மரணமடைந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது அந்த படகில் நால்வர் பயணித்துள்ளதாகவும் ஏனைய மூவரும் எவ்விதமான ஆபத்தும் இன்றி கரைதிரும்பியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

No comments:

Post a Comment