April 6, 2015

கொல்லங்கலட்டிப் பகுதியில் பாம்புக் கடிக்குள்ளானவர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம்,  கொல்லங்கலட்டிப் பகுதியில் வாழைத்தோட்டமொன்றில் வாழைக்குலை வெட்டும்போது, பாம்புக் கடிக்கு உள்ளான  ஒருவர், 
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேயிடத்தைச் சேர்ந்த பாலசிங்கம் குலசிங்கம் (வயது 42) என்பவரே இவ்வாறு பாம்புக் கடிக்கு இலக்காகியுள்ளார்.
திருமண வீட்டுக்கு வாழைக்குலை கட்டுவதற்காக, தோட்டத்துக்கு சென்று வாழைக்குலை வெட்டும்போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment