April 2, 2015

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலுக்குச் சென்ற சிறுமி மீது பலாத்காரம்.!

கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கல்முனைக் கடற்கரைப் பள்ளிவாசல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளச் சென்றிருந்த சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் புதனிரவு கைது செய்யப்பட்டிருப்பதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பஷீர்சேகுதாவூத் வித்தியாலயத்தைச் சேர்ந்த 7 வயதான இந்தச் சிறுமி தனது பாட்டியுடன் கல்முனைக் கடற்கரைப் பள்ளிவாசல் வருடாந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த சமயம் புதனிரவு காணமாமல் போயுள்ளார்
உடனடியாக அங்கு நின்றவர்களின் உதவியுடன் சிறுமியைத் தேடிய பொழுது கடற்கரைப் பள்ளி சூழலில் மையத்துப் பிட்டி பஸ்கள் நிறுத்துமிட மறைவில் குறித்த சிறுமி இளைஞனால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கண்டு மக்கள் சிறுமியைக் காப்பாற்றியதோடு சம்பந்தப்பட நபரையும் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
சிறுமி தற்சமயம் கல்முனை அஷ்ரப் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வாழைச்சேனை புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த இஷ்ஹாக் பாறூக் (வயது 28) என்ற நபர் பொலிஸாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாய் சிறுமியை பாட்டியின் பொறுப்பில் விட்டு விட்டு மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment