February 15, 2015

காதலியின் தந்தையால் காதலன் மீது தாக்குதல்!

உலகளாவிய ரீதியில் நாளை காதலர் தினம் கொண்டாட உள்ள நிலையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாசிவன் தீவில் இளைஞன்
ஒருவர் தாக்குதலுக்கிலக்காகி வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கதிரைமலை கிரிசாந்தன் (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு கடந்த புதன்கிழமை தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் வசித்து வந்த யுவதி ஒருவரை குறித்த நபர் காதலித்து வந்துள்ளார். தனது மகளை விரும்பியதால் ஆத்திரமடைந்த யுவதியின் தந்தை மற்றும் அவரது சகாக்களினால் தாக்குதலுக்குள்ளானதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

No comments:

Post a Comment