February 11, 2015

தென்மராட்சியில் விபத்து முதியவர் பரிதாப மரணம்!

யாழ். தென்மராட்சி மீசாலை, ஏ-9 வீதியில் இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார்.

மீசாலை ஏ-9 வீதியில் சைக்கிளில் பயணித்த இவரை பின்னால் வந்த பாரவூர்தி மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.அல்லாரையைச் சேர்ந்த கே.சிவனேசன்(வயது – 61) என்பவரே உயிரிழந்தவராவார். இவரது சடலம் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் நடத்திவருகின்றனர்.

No comments:

Post a Comment