February 23, 2015

ஜெனிவா நீதி தராவிட்டால் எம் தலைவன் மெளனம் கலைக்கப்படும்!

சிங்கள தேசம் தன் ஆயுதங்களின்மீது வைத்திருந்த நம்பிக்கையை தமிழீழ மக்களின் நியாயங்களின்மீது வைக்கவில்லை. அதனால், ஈழப் போராட்டம் வேகம் கொண்டது.
முள்ளிவாய்க்கால் வரையான சிங்களக் கொடூரங்கள் விடுதலைப் புலிகளது ஆயுதத்தை மௌனிக்க வைத்ததே ஒழிய, தமிழீழ மக்களது இலட்சியத்தை சிதைக்கவில்லை.
ஜெனிவாவைக் குறி வைத்து சிங்கள ஆட்சியாளர்களும் புதிய அரிதாரம் பூசிக் கொள்கின்றார்கள்.
புலம்பெயர் தமிழினம் என்ன செய்யப்போகின்றது என்பதில்தான் எங்கள் தேசத்தின் தலைவிதியே உள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் அமர்வு, தமிழினத்தின் தலைவிதியை மாற்றி அமைக்க வேண்டுமானால், புலம்பெயர் தமிழர்களாகிய நாம் ஒரு ஊழிப் பேரலையாக மாறவேண்டும். எமக்கான நீதியைக் கேட்டு, உலகப் பெருமன்றத்தின் கதவினை ஓங்கித் தட்ட வேண்டும்!
இதுதான் ஜெனிவாவின் மீது நாம் வைக்கும் இறுதி நம்பிக்கை.இதில் எம்மை ஜெனிவாவும் உலகநாடுகளும் ஏமாற்ற நினைத்தால் மீண்டும் நாம் எம் மாவீரர்களின் தியாகங்களின் மீது சத்தியம் எடுத்து எம் சுதந்திர தமிழீழத்தை அடைவோம்.நிச்சயம் எம் தலைவர் அவர்களுடைய மெளனம் கலைக்கப்படும்.


No comments:

Post a Comment