January 27, 2015

யாழ் வடமராட்சியில் கோர விபத்து! ஒருவர் பலி!!

யாழ்.வடமராட்சி வல்லிபுரக் குறிச்சி முறாவில் பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக செவ்வாய்கிழமை (27) மதியம் இடம்பெற்ற வீதி விபத்தில் ஆண்
ஒருவர் உயிரிழந்திருப்பதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
துன்னாலை வடக்கு போதனாமடத்தை சேர்ந்த சரவனமுத்து சந்திரமோகன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் தனது வீட்டிலிருந்து முறாவில் வீதியுடாக வல்லிபுர கோயிலை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே துன்னாலையிலிருந்து மண் ஏற்றிக்கொண்டு வந்த உழவு இயந்திரம் மோதியதில் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புபட்ட உழவு இயந்திரமும் சாரதியும் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment