January 26, 2015

கட்சிக்கு எதிரானவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது � பிரதமர் ரணில்1

கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுகின்றவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கமாட்டார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


பொலனறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தேர்தலின் பின்னர் யாரையும் பழிவாங்க கூடாது என்ற கட்சியின் தீர்தானத்தை அநேகமான உறுப்பினர்கள் பின்பற்றுகின்றனர்.

ஆனால் சிலர் இதனை மீறியுள்ளனர்.

அவ்வாறானவர்களுக்கு அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment