September 9, 2014

தமிழக கடற்தொழிலாளர்கள் ஆறுபோ் மன்னார் கடலில் கைது!

தலைமன்னார் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 6 பேரை சிறீலங்கா கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் நேற்று 400 இற்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அவ்வாறு சென்ற படகுகளில் ஒன்று பழுதடைந்ததால் கச்சதீவு அருகே அது தத்தளித்துக்கொண்டிருந்தது என்றும் இதன்போது அங்குவந்த சிறீலங்கா கடற்படையினர் அதிலிருந்த 6 பேரைக் கைது செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்றொழில் நீரியல் வளதிணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மன்னார் கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment