போர் நடந்த காலத்தில் கொழும்பில் வாழும் தமிழ் மக்களை பொலிஸார் பதிவு
செய்தது போன்று தற்போதும் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக
முறையிடப்பட்டுள்ளது. வெள்ளவத்தை பம்பலப்பிட்டி பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களின் வீடுகளுக்கு சென்ற பொலிஸார் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து கையளிக்குமாறு கேட்டுள்ளனர்.வீட்டு உரிமையாளரின் பெயர் மற்றும் வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளவர்களின் விபரங்கள் அனைத்தும் படிவங்களில் கோரப்பட்டுள்ளன. இதனால் கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
படிவங்களை பூர்த்தி செய்து கையளிக்காத மக்களின் வீடுகளுக்கு நேற்றுக் காலை சென்ற பொலிஸார் படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து கையளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
முறையிடப்பட்டுள்ளது. வெள்ளவத்தை பம்பலப்பிட்டி பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களின் வீடுகளுக்கு சென்ற பொலிஸார் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து கையளிக்குமாறு கேட்டுள்ளனர்.வீட்டு உரிமையாளரின் பெயர் மற்றும் வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளவர்களின் விபரங்கள் அனைத்தும் படிவங்களில் கோரப்பட்டுள்ளன. இதனால் கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
படிவங்களை பூர்த்தி செய்து கையளிக்காத மக்களின் வீடுகளுக்கு நேற்றுக் காலை சென்ற பொலிஸார் படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து கையளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment