September 11, 2014

கிறிஸ்மஸ் தீவு அகதி முகாமில் புகலிடக் கோரிக்கையாளர்கள் வெட்ட வெளியில் தூங்குவதாக அதிர்ச்சி தகவல் 1

கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமில் அகதிகள் வெட்டவெளியில் தூங்குவதாக கிறிஸ்மஸ் தீவு வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

அண்மை காலமாக அவுஸ்ரேலியாவுக்குள் உள்ள பாரிய மூன்று முகாம்கள் மூடப் பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது இதன் காரணமாக அகதிகள் பாரிய பிரச்சனைக்கு முகம் கொடுதுள் ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது .
சென்ற வாரம் 2 ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர்கள் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுள்ளதாக கிறிஸ்மஸ் தீவு தகவல்கள் தெரிவிக்கின்றன .
ஒரு வருட காலமாக இவர்களுக்கு வழக்குகள் ஏதும் நடத்தாமல் இவர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்காக அடிமைகள் போல் நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவர்களை மனிதாபிமானம் அற்ற முறயில் கிறிஸ்மஸ் தீவில் வைத்திருப்பதன் மூலம் அவுஸ்ரேலியா அரசாங்கம் பல மில்லியன் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இதன் காரணமாக இந்த முகாம்களை மூட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment