பூர்வீக மண்ணில் வாழமுடியாது புலத்தில் இரவல் மண்ணில் நான்கு
தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றோம். ஆனாலும் மண்ணையும் மக்களையும் மறக்காது அவர்களின் விடுதலைக்காக காலம் காலமாக கடினமாக உழைத்து வருகின்றோம்.
ஆனாலும் இன்னும் எமது நிலம் இருண்டுதான் இருக்கின்றது. சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பு தொடர்ந்து கொண்டுதான்இருக்கின்றது. இன்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் எங்கள் தோள்களில்தான் விடுதலைக்கான புனிதமான பணி சுமத்தப்பட்டிருக்கின்றது. இந்த பணிகளை நாம் ஆத்மாத்தமாக முன்னெடுத்து செல்கின்ற போதுதான் எமது இனத்திற்கான சுதந்திரக்காற்றை பெற்றுக்கொடுக்க முடியும்.
தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றோம். ஆனாலும் மண்ணையும் மக்களையும் மறக்காது அவர்களின் விடுதலைக்காக காலம் காலமாக கடினமாக உழைத்து வருகின்றோம்.
ஆனாலும் இன்னும் எமது நிலம் இருண்டுதான் இருக்கின்றது. சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பு தொடர்ந்து கொண்டுதான்இருக்கின்றது. இன்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் எங்கள் தோள்களில்தான் விடுதலைக்கான புனிதமான பணி சுமத்தப்பட்டிருக்கின்றது. இந்த பணிகளை நாம் ஆத்மாத்தமாக முன்னெடுத்து செல்கின்ற போதுதான் எமது இனத்திற்கான சுதந்திரக்காற்றை பெற்றுக்கொடுக்க முடியும்.
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் பல்வேறு போராட்டக் களங்கள் சர்வதேசப் பரப்பெங்கும் திறக்கப்பட்டு விடுதலைக்கான பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில் தமிழ் மக்களை விடுதலைத்தாகத்தோடு ஒன்றித்து இணைப்பதற்கான எழுச்சி நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறான ஒன்றாகத்தான் சுதந்திரத்தாகம் எழுச்சி நிகழ்வும் அமைகின்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அக்கினித் தாண்டவம் ஆடவருகின்றார். விஜய் தொலைக்காட்சி புகழ் பிறேம்கோபால் மற்றும் கீர்த்திகா பிறேம்கோபால் அத்தோடு சுதந்திர தாண்டவத்தில் வெற்றிபெறும் போட்டிக் குழுக்களுக்கு முதல் பரிசு 10000குரோனரும் இரண்டாம் பரிசு 5000 குரோனரும் மூன்றாம் பரிசு 2500குரோனரும் வழங்கி மக்கள் அங்கீகாரத்தோடு சிறப்பிக்கப்பட இருக்கின்றார்கள்.

No comments:
Post a Comment