August 16, 2014

மூதூரில் மர்மநபர் அட்டகாசம் ஆரம்பம்! பீதியில் மக்கள்!

திருகோணமலை, நிலாவெளி பொலிஸ் பிரிவிக்குட்பட்ட கட்சுனைக்கல் முஸ்லிம் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் அதிகாலை ஒன்பது வீடுகளினன் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மிக சூட்சுமமான
முறையில் கழற்றப்பட்டு வீடுகளுக்குள் மர்ம நபர் புகுந்தார் என்று அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் முறைப்பாட்டையம் பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு, கைரேகை அடையாளங்களைப் பதிவுசெய்தனர் என்றும் பொலிஸ் மோப்பநாய்களின் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்து எந்த பொருட்களையும் திருடிச் செல்லவில்லை என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். பள்ளித் தலைவர், சமுர்த்தி உத்தியோகத்தர், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஆகியோரின் வீடுகளிலும் வெவ்வேறு நேரங்களில் மர்மநபர் புகுந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment