August 16, 2014

தென்னிலங்கைக்கு கடத்திச் செல்ல முற்பட்ட 2 சிறுத்தைப் புலிக் குட்டிகள் புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்பு

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசனினால் கைப்பற்றப்பட்ட மேற்படி சிறுத்தை குட்டிகள் இன்று மாலை வனவிலங்கு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் போது கருத்துத் தெரிவித்த வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன்:-
நாங்கள் நேற்று புதுக்குடியிருப்புப் பகுதிக்குச் சென்றிருந்த போது இந்த இரு குட்டிகளையும் பார்க்கக் கூடியதாக இருந்தது. இந்த புலிக்குட்டிகளை வைத்திருந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்தவதில்லை. அவர்களை நாங்கள் அiடாயளம் காண முற்பட்ட போது அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்கள். ஆகவே இந்த குட்டிகளை கைப்பற்றக் கூடியதாக இருந்தது.
உடனடியாகவே அனுராதபுரத்தில் உள்ள வனவிலங்கு திணைக்களத்திற்கு அறிவித்திருந்தோம். அதனையடுத்து இன்று காலை கொழும்பில் இருக்கின்ற வனவிலங்கு திணைக்களத்தின் இயக்குணருக்கு அறிவிக்கப்பட்டு அவர் ஊடுடாக விலங்குகளின் ஆராக்கியம் தொடர்பான இயக்குணல் வைத்தியர் தாராக பிரசாத்திற்கு அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வைத்திய சந்தன ஜெயசிங்க யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண விவசாய அமைச்சின் அலுவலகத்திற்கு வருகைதந்திருந்தார்.
இந்த சிறுத்தைப் புலியினைப் பற்றி நாங்கள் சொல்ல வேண்டுமானால் சிறிலங்காவில் இருக்கக் கூடிய காட்டு விலங்குகளின் ராஜா சிறுத்தை தான். சிங்கம் இல்லை. சிறிலங்காவில் சிங்கமே கிடையாது. சிறுத்தை மட்டும்தான் உள்ளது.
அதிலும் சிறிலங்காவில் உள்ள சிறுத்தையும், இந்தியாவில் உள்ள சிறுத்தைக்கும் வித்தியாசங்கள் உள்ளன. இந்த சிறுத்தைப் புலி சிறிலங்காவிற்கே உரித்தான வித்தியாசமான ஒரு தனித்த இனம். சிறிலங்கா அரசாங்கம் பௌத்த மதத்தின் நம்பிக்கையின் அடிப்படையில் சிங்கத்தை தேசிய கொடியில் ஏற்றியதன் பின்னர் அவர்களால் தேசிய விலங்கினைத் தெரிவு செய்ய முடியாத நிலைதான் இன்றுவரைக்கும் இருக்கின்றது.
அதனாலே தான் இன்றுரைக்கும் தேசிய விலங்கு இல்லை. ஆனால் தேசிய விலங்கினை தெரிவு செய்ய வேண்டும் என்றால் ஒட்டுமொத்த சிறிலங்காவில் இருக்கக் கூடிய ஒரே விலங்கு இந்த சிறுத்தைப் புலி மட்டும்தான். ஆகவே இந்த சிறுத்தைப் புலிதான் தேசிய விலங்கென அடையாளத்தினைப் பெறவேண்டிய விலங்கு. ஆனால் அந்த அடையாளத்தை சிறிலங்கா அரசாங்கம் அந்த அடையாளத்தினைக் கொடுக்க பயம் கொள்ளுகின்றது.
ஏனென்றால் புலி என்று அடையாளப்படுத்தப்பட்ட விடுதலை அமைப்பு ஒன்று இங்கு இருந்த காரணத்தினால். சிறிலங்காவில் இது அழிந்து கொண்டிருக்கும் இனமாக இயற்கையை பாதுகாக்கும் சர்வதேச ஒன்றியம் இந்த சிறுத்தைப் புலியினை அழிந்து கொண்டிருக்கும் ஒரு இனமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
ஆகவே இதனை பாதுகாக்க வேண்டியது எங்கள் எல்லோருடைய பொறுப்புமாக இருக்கின்றது. அந்தப் பொறுப்புணர்வில்தான் 2 சிறுத்தைப் புலிக் குட்டிகளையும் வனவிலங்கு உயிர் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளோம்.
இந்த திணைக்களத்தினரிடம் நாங்கள் சொல்லுகின்றது என்னவென்றால் நிச்சையமாக காடுகளில் இருந்து வலைப்பின்னல் போன்று விலங்குகளின் கடத்தல் நடந்து கொண்டு இருக்கின்றது. இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்டில் இருந்த இவ்வாறான விலங்குகள் வெளிவருகின்றது என்றால் நிச்சையமாக சிறிலங்கா இராணுவத்தினருடைய ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும். அல்லது தனித்தொரு வியபாராக நடந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் இந் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சிறுத்தைப் புலிகள் காப்பாற்றப்பட வேண்டும்.
மற்றும் பலருக்குத் தெரியாது உண்மையிலேயே சிறிலங்காவில் கரும்புலிகள் இருக்கின்றது என்று. இந்த சிறுத்தைப் புலிகளிலும் மெலனின் நிறப் பொருட்கள் ஆட்சி பெற்ற புலிகள் கரும் சிறுத்தைகளாக எங்களுடைய காடுகளில் இருக்கின்றது. எனவே இதனை நாங்கள் காப்பாற்ற வேண்டும் என்றார்.


No comments:

Post a Comment