தமிழினத் துரோக படைப்புக்களான புலிப்பார்வை, கத்தி திரைப்படங்களுக்கு எதிராக உறுதியுடன் போராடிவரும் மாணவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.தமிழ் உணர்வாளர்கள் இவ்விடையத்தில் கனத்த
மௌனத்தை கடைப்பிடித்து வரும் நிலையிலும் இத்திரைப்படங்களிற்கு சீமான் ஆதரவு தெரிவித்து நிற்கின்ற நிலையிலும் மாணவர்கள் இவ்விடையத்தில் தம்மால் இயன்றவரை உலகத் தமிழர்களின் வெளிப்பாடாக போராடிவரும் நிலையில் அவர்களுக்கு மிரட்டல் விடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் அராஜகமான செயலுமாகும்.
கத்தி படத்தை எதிர்ப்பதால் விஜய் ரசிகர்கள் தரப்பில் இருந்து போராடும் மாணவர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மான உணர்வோடு போராடிவரும் மாணவப் போராளிகளுக்கு மிரட்டல் விடுக்கும் துணிவை விஜய் ரசிகர்களுக்கு கொடுத்தது சீமானின் ஆதரவு தான் என்பதை மறுப்பதற்கில்லை.
முருகதாஸ், விஜய் போன்ற திரையுலக நட்சத்திரங்களை எதிர்க்க அஞ்சி துரோகத்தை அனுமதிக்கத் தயாராக யார் நின்றாலும் உலகத் தமிழர்களின் சார்பில் ஈழதேசம் இணையம் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றது.
சீமான் இவ்விரு துரோகப் படைப்புகளிற்கு ஆதரவாக நிற்கின்ற நிலையில் நாம் தமிழர் கட்சியினருக்கும் மாணவர்களுக்கும் இடையில் இணையத்தள மோதல்கள் நடைபெற்று வருகின்றது.
இது நேரடி பகையாகவும் மோதல்களாகவும் உருவெடுக்கும் அளவிற்கு உச்சத்தைப் பெற்றுள்ளது. இதனை சீமான் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்நிலையினை தொடர்வதற்கு அனுமதித்து வேடிக்கை பார்ப்பாரேயானால் உலகத் தமிழர்களிடமிருந்து நிரந்தரமாக அந்நியப்படுத்தப்படுவது உறுதி.
நாம் தமிழர் கட்சியினரோ விஜய் ரசிகர்களோ புலிப்பார்வை தரப்பினரோ மாணவப் போராளிகளை தாக்க நினைத்தால் விளைவுகள் மோசமானதாக இருக்கும். போராடும் மாணவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அவர்கள் பத்துக் கோடி தமிழர்களின் பிரதிபலிப்பாகவே களத்தில் நிற்கின்றனர் என்பதனை மிரட்டல் விடுபவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment