May 18, 2014

யாழில் செ.கஜேந்திரன் வீட்டிற்கு அருகில் படையினர் குவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் வீட்டிலிருந்து 50மீற்றா் தூரத்திலுள்ள சனசமூக நிலையத்தில் திடீரென படையினர்
குவிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரனின் வீட்டிற்கு ருகாமையிலுள்ள சிவசக்தி சனசமூக நிலையத்தில் நேற்று மாலை 5.00 மணி தொடக்கம் படையினர் நிலைகொண்டுள்ளார்கள்.
குறித்த சனசமூக நிலையம் கந்தா்மடத்திலுள்ள சிவன் -அம்மன் கோவிலின் தெற்குப்புற வீதியில் அமைந்துள்ளது. நேற்று பிற்பகல் 4.00மணியளவில் அப்பகுதிக்கு படையினர் வந்துள்ளனா். அருகில் உள்ள வீடுகளில் குறித்த சனசமூக நிலையத்தின் தலைவா் யார் என்று விசாரித்துள்ளனா்.
நிர்வாக உறுப்பினர் ஒருவரை கண்டுபிடித்து அவரிடம் குறித்த சனசமூக நிலையத்தின் திறப்பினை பெற்றுக் கொண்ட பின்னர் தாம் இரண்டுநாட்கள் அங்கு தங்கப் போவதாக கூறியுள்ளனா்.
குறித்த நிர்வாக உறுப்பினரும் அச்சம் காரணமாக மறுபேச்சுப் பேசமுடியாத நிலையில் சம்மதித்துள்ளார்
நாளைய தினம் மே 18ம் திகதி இலங்கை அரசாங்கம் யுத்த வெற்றி விழாவினைக் கொண்டாடவுள்ள நிலையில் அந்த நாளை இன அழிப்பு நாள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரகடனம் செய்துள்ளது.
இன்று நாடு முழுவதும் போரால் வெற்றியை கொண்டாடுவதற்கு சிறீலங்கா அரசும் அதன் இராணுவமும் தயாராகி வரும் நிலையில் அந்நாளில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நினைவேந்தல் நிகழ்வை நடாத்த தாயகத்திலும்இ புலம்பெயா் தேசங்களிலும் தமிழகத்திலும் தன்மானம் உள்ள தமிழா்கள் தயாராகி வருகின்றனா்.
இந் நிலையில் அக் கட்சியின் பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரன் வீட்டிலிருந்து 50 மீற்றா் தூரத்தில் அமைந்துள்ள குறித்த சனசமூக நிலையத்தில் இராணுவம் குடிகொண்டுள்ளமை அப்பகுதியில் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை கடந்த வருடம் வவுனியா மன்னார் மாவட்டங்களில் தமிழ் இன படுகொலை நினைவேந்தலை கொண்டாடியமைக்காக செ.கஜேந்திரன் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உட்பட கட்சி உறுப்பினர்கள் மக்கள் மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த சி.கஜேந்திரகுமார்இகி.வசந்தரூபன் ஆகியோர் பயங்கரவாத பிரிவினரால் கடுமையான விசாரணைக்கு உட்படுத்த பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

No comments:

Post a Comment