May 18, 2014

முள்ளிவாய்க்கால் பீதி! ஊடக அமையத்தில் பதட்டம்!

இன்று சனிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்புக்காக வருகை
தந்த சிவாஜிலிங்கம் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டிருந்த வேளை ஊடக அமையத்தின் முன்றலில் 10க்கு மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் புலனாய்வர்கள் நடமாடியதாலேயே இப் பதட்டம் நிலவியதாக யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியத் தேர்தலில் வெற்றிபெற்ற நரேந்திரமோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கவே செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார் சிவாஜிலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment