May 18, 2014

வடசென்னையில் வைகோ தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு!

முள்ளி்வாய்க்கால் படுகொலையின் 5ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று மாலை
வடசென்னை தண்டையார் பேட்டையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகோ முன்னிலையில் இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்வில் தமிழருவிமணியன்,டாக்டர் இரா.மாசிலாமணி,கொளத்தூர் மணி,கோவை இராமகிருஷ்ணன்,புகழேந்தி தங்கராஜ்,ஓவீயர் வீரசந்தாணம்,திருமுருகன் காந்தி,வழக்கறிஞர் புரட்சிகவிதாசன்,அர்ஜுன் சம்பத்,வழக்கறிஞர் நாகை திருவள்ளுவன், ஆவடி இரா.அந்திரிதாஸ் விடுதலை வேந்தன், வழக்கறிஞர் இளையஅரசு,கவிஞர் மணிவேந்தன்,கவிஞர் பாரிமைந்தன் , ஈட்டிமுனை இளமாறன் உள்ளிட்டவர்கள் கருத்துரை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment