May 4, 2014

கிழக்குப் பல்கலைக் கழகம் மறு அறிவித்தல் வரை இழுத்துமூடல்!

கிழக்குப்பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தின் அனைத்து கல்விசார் நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டிருப்பதாக கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா அறிவித்துள்ளார். கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தொடர்ந்தேர்ச்சையாக மேற்கொண்டு வரும் குழப்பங்கள் காரணமாக இந்த நிலைமை தோன்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆம் திகதி முதல் மாணவர்களால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்ற நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவினால் வெளியிடப்பட்ட அறிவித்தலில் கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தின் அனைத்து கல்விசார் நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்படுவதாகவும், பல்கலைக் கழக விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும்  சனிக்கிழமை(03) காலை ஏழு மணிக்கு முன்னர் தங்களது விடுதிகளிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment