May 19, 2014

அனந்தி வீதியில் இறங்கி மறியல் போராட்டம்!

உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்கு செல்ல அனுமதி கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினரும்
காணாமல் போனோருக்காக குரல் எழுப்பி வருபவருமான அனந்தி சசிதரன் ஆர்ப்பாட்டமொன்றினில் குதித்தார். அவருடன் அவரது உதவியாளர் மட்டுமே உள்ள நிலையினில் மக்கள் நடமாட்டமேதுமற்ற கீரிமலையின் எல்லையினில் அவர் சிறீலங்கா பொலிஸ் மற்றும் சிறீலங்கா படையினரது சோதனை சாவடி முன்பதாக இப்போராட்டத்தினை நடத்தினார்.


உயிரிழந்தவர்களுக்கான பிதிர்கடன் நிறைவேற்றுவதற்காக கீரிமலையினில் விசேட ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்தப்பகுதி முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு முற்றுகைக்குள்ளாக்கப்பட்டது. கீரிமலைக்குச்செல்லும் பிரதான வீதி மார்க்கங்கள் அனைத்திலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீதிகள் மூடப்பட்டுள்ளன. அந்தப் பிரதான வீதிகளினூடாகவோ குறுக்கு வீதிகளினூடாகவோ யாரும் கீரிமலைக்குச் செல்ல முடியாதவாறு இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையினில் குறித்த புதிய சோதனை சாவடியொன்றினில் அனந்தி வழிமறிக்கப்பட்ட நிலையினில் தன்னை கீரிலைக்கு செல்ல அனுமதிக்க கோரி வீதியின் நடுவே அமர்ந்து அவர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அவ்வேளையினில் தான் படை அதிகாரிகளினால் அச்சுறுத்தப்பட்டதாகவும் மேலும் தெரிவித்த அவர் தன்னை புகைப்படமெடுத்து அச்சுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment