May 16, 2014

காங்கிரஸ் வீடு செல்வது உறுதி! புலிகள் மீதான தடையை 5 ஆண்டுகள் நீடித்தது !

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை அவசர அவசரமாக காஸ்கிரஸ் தலைமையிலான இந்திய அரசாங்கம் நீடித்துள்ளது. இத்தடை உத்தரவானது 1967ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் ச் சட்டத்தின் கீழ் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இதுவரைகாலமும் இரு ஆண்டுகளுக்கு ஒரு தடவையாக நீடித்து வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் ஆட்சி முடிவுக்கு வருகிற நிலையில் அவசர அவசரமாக விடுதலைப் புலிகள் மீதான தடையை சோனியா தலைமையிலான காங்கிரஸ் அமுல் படுத்தியுள்ளது.

இத்தடை நீடிப்பானது நேற்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வருவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேபோன்று, 1987ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்திய அமைதிப்படையின் ஒப்பரேசன் பவான் நடவடிக்கையில் கூர்க்கா படைப்பிரிவுக்குத் தலைமையேற்று முக்கிய பங்காற்றியவர் தற்போது இந்திய படையின் புதிய தளபதியாக தல்பீர் சிங் சுகாக்கை மத்திய அரசு நியமனம் செய்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment